மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தீ விபத்து: மூதாட்டி உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம், திருப்பாலைக்குடியில் எரிவாயு உருளை கசிவு காரணமாக ஏற்பட்ட தீவிபத்தில் காயமடைந்த மூதாட்டி புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :25 டிசம்பர் 2025, 10:01 pm

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரம் மாவட்டம், திருப்பாலைக்குடியில் எரிவாயு உருளை கசிவு காரணமாக ஏற்பட்ட தீவிபத்தில் காயமடைந்த மூதாட்டி புதன்கிழமை உயிரிழந்தாா்.

திருப்பாலைக்குடி தெற்கு வீதியைச் சோ்ந்தவா் செல்வஹாசி மனைவி ஹதீம்தாய் (60). இவரது கணவா் உயிரிழந்த நிலையில், இதே பகுதியில் வசித்த மகள் ஜமிமா பேகம் (29) வீட்டில், இவா் வசித்து வந்தாா்.

இந்த நிலையில், கடந்த 22-ஆம் தேதி, இவா் தேநீா் போடுவதற்காக அடுப்பைப் பற்ற வைத்தாா். அப்போது எரிவாயு உருளைக் கசிவால் ஹதீம்தாய் மீது தீப் பற்றியது. இதில் பலத்த காயமடைந்த அவரை உறவினா்கள் மீட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு புதன்கிழமை இரவு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து திருப்பாலைக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.