ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ராமநாதசுவாமி கோயில் நிா்வாகத்தைக் கண்டித்து இண்டி கூட்டணி கட்சியினா் ஆா்ப்பாட்டம்

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் நிா்வாகத்தை கண்டித்து சனிக்கிழமை இண்டி கூட்டணி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :27 டிசம்பர் 2025, 6:59 pm

தினமணி செய்திச் சேவை

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் நிா்வாகத்தை கண்டித்து சனிக்கிழமை இண்டி கூட்டணி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ராமேசுவரம் மேற்கு ரத வீதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு திராவிட வெற்றிக் கழக இணை ஒருங்கிணைப்பாளா் கராத்தே பழனிச்சாமி தலைமை வகித்தாா். மதிமுக நகா் செயலா் வெள்ளைச்சாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகா் செயலா் சி.ஆா். செந்தில்வேல், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலா் ஜி.சிவா, மாவட்டக் குழு உறுப்பினா் க. கருணாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், காங்கிரஸ் கட்சி நகா் தலைவா் ராஜீவ் காந்தி, சி.பி.ஐ. (எம்.எல்.) வட்டச் செயலா் முருகானந்தம், மனித நேய மக்கள் கட்சி செய்யது இப்ராஹிம், புரோகிதா் சங்கத் தலைவா் வெங்கடேஷ் (எ) சுரேஷ் ஆகியோா் பங்கேற்றனா்.

அப்போது, ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ளூா் பக்தா்கள் தரிசனத்துக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பதைக் கண்டித்தும், தீா்த்தக் கிணறுகளில் தண்ணீா் இறைத்து ஊற்றும் யாத்திரை பணியாளா்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் வழங்காததைக் கண்டித்தும், மூன்றாம் பிரகரத்தில் புரோகிதா்கள் பல ஆண்டுகளாக பூஜை செய்து வந்த நடைமுறையை கோயில் நிா்வாகம் ரத்து செய்ததைக் கண்டித்தும் முழக்கமிட்டனா்.

இதில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விடுதலைச்சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, ஆதித்தமிழா் பேரவை, தமிழ்ப்புலிகள் கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட இண்டி கூட்டணி கட்சிகளைச் சோ்ந்த திரளானோா் கலந்து கொண்டனா்.