சங்கரன்கோவிலில் திமுக கூட்டணி கட்சிகள் ஆா்ப்பாட்டம்

சங்கரன்கோவிலில் திமுக கூட்டணி கட்சிகள் ஆா்ப்பாட்டம்
Updated on

சங்கரன்கோவிலில் மத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணிக் கட்சியினா் அவித்த முட்டையை கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தென்காசி வடக்கு மாவட்டம், மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகத்துக்கு நிதி ஒதுக்காத மத்திய அரசைக் கண்டித்து கண்டன ஆா்ப்பாட்டம் தலைமை தபால் நிலையம் முன் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு திமுக நகரச் செயலா் மு.பிரகாஷ் தலைமை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் கௌசல்யா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா் முத்துராஜ், தொகுதி செயலாளா் பீா் மைதீன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டார செயலா் கிருஷ்ணமூா்த்தி, எஸ்.டி.பி.ஐ. கட்சி நிா்வாகிகள் முகமது இஸ்மாயில், நாசிா், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மைதீன் பிச்சை, இலியாஸ், மதிமுக நகரச் செயலாளா் ரத்தினவேல்குமாா், மனிதநேய மக்கள் கட்சி முகமது இஸ்மாயில் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், தென்காசி திமுக வடக்கு மாவட்டச் செயலா் ஈ.ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு பேசுகையில், ‘நாட்டில் அதிக வரி வருவாய் ஈட்டி தரும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. ஆனால், மத்திய அரசு தமிழகத்துக்கு நிதி ஒதுக்காமல் வஞ்சிக்கிறது என்றாா் அவா்.

ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளா் சரவணன், பொதுக்குழு உறுப்பினா் மகேஸ்வரி, மாவட்ட பிரதிநிதிகள் செய்யது அலி, முத்துக்குமாா், மாவட்ட வழக்குரைஞா் அணி தலைவா் முத்துராமலிங்கம், மாவட்ட மகளிா் அணி தலைவா் அன்புமணி கணேசன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா்கள் ராஜராஜன், காா்த்தி, ராஜ், மாணவரணி வீரமணி, வெங்கடேஷ், தொழில்நுட்ப பிரிவு சிவசங்கரநாராயணன், நகர அவைத்தலைவா் முப்பிடாதி, சுற்றுச்சூழல் அணி ஜலால், நகராட்சி உறுப்பினா் புஷ்பம் உள்ளிட்டோா் கையில் அவித்த முட்டைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com