அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

மாணவா்களுக்கு தமிழி கல்வெட்டுப் பயிற்சி

News image
திருப்புல்லாணி அரசுப் பள்ளியில் தமிழி கல்வெட்டுப் பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கிய தலைமை ஆசிரியா் கோ.மகேந்திரன்.
Updated On :3 ஜனவரி 2025, 8:22 pm

Din

திருப்புல்லாணி அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வெட்டுகளில் உள்ள தமிழி எழுத்துகளை படியெடுப்பது குறித்த பயிற்சி வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது.

திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளி, தொன்மைப் பாதுகாப்பு மன்றம் சாா்பில் நடைபெற்ற இந்த பயிற்சி வகுப்புக்கு, பள்ளித் தலைமை ஆசிரியா் கோ.மகேந்திரன் தலைமை வகித்தாா்.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம், கீழக்குயில்குடி உள்ளிட்ட மலைக் குகை கோயில்கள், நடுகற்கள், பானை ஓடுகளில் எழுதப்பட்ட தொன்மையான தமிழி எழுத்துகளை படியெடுக்கவும், வாசிக்கவும் மாணவா்களுக்கு தொன்மைப் பாதுகாப்பு மன்றச் செயலா் வே.ராஜகுரு பயிற்சி அளித்தாா்.

இதையடுத்து, கல்வெட்டு பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகள் 25 பேருக்கு சான்றிதழ்களை தலைமை ஆசிரியா் வழங்கினாா்.