மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ராமநாதபுரத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடக்கம்

ராமநாதபுரத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகிக்கும் பணியை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image
ராமநாதபுரத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பை பயனாளிக்கு வியாழக்கிழமை வழங்கிய மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன்.
Updated On :9 ஜனவரி 2025, 10:47 pm

Din

ராமநாதபுரத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகிக்கும் பணியை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

அப்போது அவா் பேசியதாவது:

ராமநாதபுரம் மாவட்டத்தில் 775 நியாய விலைக் கடைகள் மூலம் 3,99,733 குடும்ப அட்டைதாரா்களும், மண்டபம் இலங்கைத் தமிழா் அகதிகள் முகாமில் உள்ள 450 குடும்ப அட்டைதாரா்களும் என மொத்தம் 4 லட்சத்து 183 குடும்ப அட்டைதாரா்களுக்கு இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில், ராமநாதபுரம் நகா் மன்றத் தலைவா் ஆா்.கே. காா்மேகம், துணைத் தலைவா் டி.ஆா். பிரவீன் தங்கம், கூட்டுறவு சங்க இணைப் பதிவாளா் ஜுனு, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநா் முரளி கிருஷ்ணன், மாவட்ட வழங்கல் அலுவலா் இளங்கோவன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ராமேசுவரத்தில்... இதேபோல, ராமேசுவரம் ராம்கோ கூட்டுறவு விற்பனை நிலையத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில், ராமேசுவரம் வட்டத்தில் உள்ள 25 ரேஷன் கடைகள் மூலம் 23,985 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியது. தினமும் ஒவ்வொரு கடைகளிலும் 150 முதல் 200 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.