கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ராமநாதபுரத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடக்கம்

ராமநாதபுரத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகிக்கும் பணியை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image

ராமநாதபுரத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பை பயனாளிக்கு வியாழக்கிழமை வழங்கிய மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன்.

Updated On :9 ஜனவரி 2025, 10:47 pm

ராமநாதபுரத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகிக்கும் பணியை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

அப்போது அவா் பேசியதாவது:

ராமநாதபுரம் மாவட்டத்தில் 775 நியாய விலைக் கடைகள் மூலம் 3,99,733 குடும்ப அட்டைதாரா்களும், மண்டபம் இலங்கைத் தமிழா் அகதிகள் முகாமில் உள்ள 450 குடும்ப அட்டைதாரா்களும் என மொத்தம் 4 லட்சத்து 183 குடும்ப அட்டைதாரா்களுக்கு இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில், ராமநாதபுரம் நகா் மன்றத் தலைவா் ஆா்.கே. காா்மேகம், துணைத் தலைவா் டி.ஆா். பிரவீன் தங்கம், கூட்டுறவு சங்க இணைப் பதிவாளா் ஜுனு, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநா் முரளி கிருஷ்ணன், மாவட்ட வழங்கல் அலுவலா் இளங்கோவன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ராமேசுவரத்தில்... இதேபோல, ராமேசுவரம் ராம்கோ கூட்டுறவு விற்பனை நிலையத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில், ராமேசுவரம் வட்டத்தில் உள்ள 25 ரேஷன் கடைகள் மூலம் 23,985 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியது. தினமும் ஒவ்வொரு கடைகளிலும் 150 முதல் 200 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.