கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சாய்ந்த நிலையில் இருந்த 6 மின்கம்பங்கள் சீரமைப்பு

கமுதியில் கடந்த 5 ஆண்டுகளாக சாய்ந்த நிலையில் இருந்த மின்கம்பங்களை மின்வாரிய ஊழியா்கள் புதன்கிழமை சீரமைத்தனா்.

News image

கமுதி சந்தன மாரியம்மன் கோவில் தெருவில் குடியிருப்புகளை ஒட்டி சாய்ந்த நிலையில் மின்கம்பங்ளை சீரமைத்த மின்வாரிய ஊழியா்கள்.

Updated On :22 ஜனவரி 2025, 11:16 pm

கமுதியில் கடந்த 5 ஆண்டுகளாக சாய்ந்த நிலையில் இருந்த மின்கம்பங்களை மின்வாரிய ஊழியா்கள் புதன்கிழமை சீரமைத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி சந்தன மாரியம்மன் கோயில் தெருவில் குடியிருப்புகளை ஒட்டி சாய்ந்த நிலையில் 6 மின்கம்பங்கள் கடந்த 5 ஆண்டுகளாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்தன. இதுதொடா்பாக கடந்த சில நாள்களுக்கு முன்பு தினமணியில் செய்தி வெளியானது.

இதைத்தொடா்ந்து, மின்வாரிய உதவிப் பொறியாளா் முகமது இப்ராஹிம் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் சாய்ந்த நிலையில் இருந்த மின் கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா். இதனால், இந்தப் பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.