எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! மோடியின் பேச்சு தோல்விக்கான சான்றுகள்! ராகுல் காந்தி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுஅமைச்சர் கீர்த்தனா பதவியேற்கவில்லை! காரணம் என்ன?வேட்டி கலாசாரத்தை மாற்றிய முதல் முதல்வர் விஜய்! கருப்பு கோட்-சூட்டின் பின்னணி என்ன?சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்மு.க. ஸ்டாலினை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! சட்டப்பேரவைக்கும் கோட்-சூட்டில் வந்த முதல்வர் ஜோசப் விஜய்! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாகப் பதவியேற்கவில்லை! காரணம் என்ன? தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

4வது காலாண்டு முடிவுகளுக்குப் பிறகு 3% சரிந்த பஞ்சாப் & சிந்து வங்கி!

பொதுத்துறை வங்கியான பஞ்சாப் & சிந்து வங்கி, நிஃப்டி-யில் 2.72% வரை சரிந்து, பங்கு ஒன்றுக்கு ரூ. 25 என்ற நிலையை எட்டியது.

News image

பஞ்சாப்-சிந்து வங்கி - கோப்புப்படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 8:20 pm IST

அரசுக்குச் சொந்தமான, பொதுத்துறை வங்கியான பஞ்சாப் & சிந்து வங்கியின் பங்குகள், இன்றைய வர்த்தகத்தில், நிஃப்டி-யில் 2.72% வரை சரிந்து, பங்கு ஒன்றுக்கு ரூ. 25 என்ற நிலையை எட்டியது.

வங்கியின் வாராக் கடன் குறைவாக இருந்ததும், ஒரு முக்கியக் காரணமாக அமைந்ததால், 2026 நிதியாண்டின் 4வது காலாண்டில் வங்கியின் நிகர லாபம் 35% உயர்ந்து ரூ.422 கோடியாக இருப்பதாக அறிவித்தது பஞ்சாப் & சிந்து வங்கி. இதுவே, கடந்த ஆண்டு, வங்கி ரூ.313 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது.

வங்கியின் மொத்த வருமானம், கடந்த ஆண்டு ரூ. 3,836 கோடியாக இருந்த நிலையில், தற்போது ரூ. 3,457 கோடியாக குறைந்துள்ளதாகப் பஞ்சாப் & சிந்து வங்கி தெரிவித்துள்ளது. அதே வேளையில், அதன் வட்டி வருமானமும் ரூ. 3,159 கோடியிலிருந்து ரூ. 3,030 கோடியாக குறைந்துள்ளது.

சொத்தை பொறுத்தவரை, வங்கியின் மொத்த வாராக் கடன், மார்ச் 2025 இறுதியில் 3.38% ஆக இருந்த நிலையில், தற்போது மொத்தக் கடன் வழங்கல்களில் இது 2.4% ஆக குறைந்துள்ளது. வங்கியின், நிகர வாராக் கடன் முன்னதாக 0.96% ஆக இருந்த நிலையில், தற்போது 0.79% ஆக குறைந்துள்ளது.

வங்கியின் மூலதன விகிதம், 2025 நிதியாண்டின் இறுதியில் இருந்த 17.41 சதவீதத்திலிருந்து, 17.42 சதவீதமாக சற்று மேம்பட்டுள்ளது.

2025-26 முழு நிதியாண்டுக்கான வங்கியின் லாபம், கடந்த ஆண்டு ரூ. 1,016 கோடியாக இருந்த நிலையில், தற்போது 30% உயர்ந்து ரூ. 1,322 கோடியாக உள்ளது. வங்கியின் மொத்த வருமானம், கடந்த ஆண்டு ரூ. 13,049 கோடியாக இருந்த நிலையில், தற்போது ரூ. 13,759 கோடியாக உயர்ந்துள்ளது.

2025-26 நிதியாண்டிற்காக, தலா ரூ. 10 முகமதிப்பு கொண்ட ஒவ்வொரு பங்குக்கும் 39 காசுகள் ஈவுத்தொகையாக வழங்க வங்கியின் இயக்குநர்கள் குழு பரிந்துரைத்துள்ளது. அதே வேளையில், பங்குதாரர்களின் ஒப்புதலும் பெறவேண்டும் என்றது.

Summary

Shares of Punjab & Sind Bank, slipped as much as 2.72% to rupees 25 a piece on the NSE.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.