ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

4வது காலாண்டு முடிவுகளுக்குப் பிறகு 3% சரிந்த பஞ்சாப் & சிந்து வங்கி!

பொதுத்துறை வங்கியான பஞ்சாப் & சிந்து வங்கி, நிஃப்டி-யில் 2.72% வரை சரிந்து, பங்கு ஒன்றுக்கு ரூ. 25 என்ற நிலையை எட்டியது.

News image

பஞ்சாப்-சிந்து வங்கி - கோப்புப்படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 8:20 pm IST

அரசுக்குச் சொந்தமான, பொதுத்துறை வங்கியான பஞ்சாப் & சிந்து வங்கியின் பங்குகள், இன்றைய வர்த்தகத்தில், நிஃப்டி-யில் 2.72% வரை சரிந்து, பங்கு ஒன்றுக்கு ரூ. 25 என்ற நிலையை எட்டியது.

வங்கியின் வாராக் கடன் குறைவாக இருந்ததும், ஒரு முக்கியக் காரணமாக அமைந்ததால், 2026 நிதியாண்டின் 4வது காலாண்டில் வங்கியின் நிகர லாபம் 35% உயர்ந்து ரூ.422 கோடியாக இருப்பதாக அறிவித்தது பஞ்சாப் & சிந்து வங்கி. இதுவே, கடந்த ஆண்டு, வங்கி ரூ.313 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது.

வங்கியின் மொத்த வருமானம், கடந்த ஆண்டு ரூ. 3,836 கோடியாக இருந்த நிலையில், தற்போது ரூ. 3,457 கோடியாக குறைந்துள்ளதாகப் பஞ்சாப் & சிந்து வங்கி தெரிவித்துள்ளது. அதே வேளையில், அதன் வட்டி வருமானமும் ரூ. 3,159 கோடியிலிருந்து ரூ. 3,030 கோடியாக குறைந்துள்ளது.

சொத்தை பொறுத்தவரை, வங்கியின் மொத்த வாராக் கடன், மார்ச் 2025 இறுதியில் 3.38% ஆக இருந்த நிலையில், தற்போது மொத்தக் கடன் வழங்கல்களில் இது 2.4% ஆக குறைந்துள்ளது. வங்கியின், நிகர வாராக் கடன் முன்னதாக 0.96% ஆக இருந்த நிலையில், தற்போது 0.79% ஆக குறைந்துள்ளது.

வங்கியின் மூலதன விகிதம், 2025 நிதியாண்டின் இறுதியில் இருந்த 17.41 சதவீதத்திலிருந்து, 17.42 சதவீதமாக சற்று மேம்பட்டுள்ளது.

2025-26 முழு நிதியாண்டுக்கான வங்கியின் லாபம், கடந்த ஆண்டு ரூ. 1,016 கோடியாக இருந்த நிலையில், தற்போது 30% உயர்ந்து ரூ. 1,322 கோடியாக உள்ளது. வங்கியின் மொத்த வருமானம், கடந்த ஆண்டு ரூ. 13,049 கோடியாக இருந்த நிலையில், தற்போது ரூ. 13,759 கோடியாக உயர்ந்துள்ளது.

2025-26 நிதியாண்டிற்காக, தலா ரூ. 10 முகமதிப்பு கொண்ட ஒவ்வொரு பங்குக்கும் 39 காசுகள் ஈவுத்தொகையாக வழங்க வங்கியின் இயக்குநர்கள் குழு பரிந்துரைத்துள்ளது. அதே வேளையில், பங்குதாரர்களின் ஒப்புதலும் பெறவேண்டும் என்றது.

Summary

Shares of Punjab & Sind Bank, slipped as much as 2.72% to rupees 25 a piece on the NSE.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.