பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

யூகோ வங்கியின் லாபம் 23% உயர்வு!

யூகோ வங்கி, அதன் நிகர லாபம் 23 சதவீதம் உயர்ந்து ரூ. 801 கோடியாகப் இருப்பதாக தெரிவித்தது.

Published On :

புதுதில்லி: கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான யூகோ வங்கி, மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த 4வது காலாண்டில், அதன் நிகர லாபம் 23 சதவீதம் உயர்ந்து ரூ. 801 கோடியாகப் இருப்பதாக தெரிவித்தது.

நிதியாண்டின் 4வது காலாண்டில் வங்கி ரூ. 653 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது. அதே வேளையில், மார்ச் முடிய வரையான காலாண்டில் வங்கியின் வருமானம் சற்று குறைந்துள்ளது. கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில் இது ரூ. 8,137 கோடியாக இருந்த வருமானம், இந்த காலாண்டில் இது ரூ. 7,365 கோடியாகக் குறைந்துள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது.

மதிப்பாய்வுக்கு உட்பட்ட இக்காலகட்டத்தில் வங்கியின் வட்டி வருமானம் ரூ. 6,656 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு இது ரூ. 6,142 கோடியாக இருந்தது.

2026 மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டின் நிகர லாபத்திலிருந்து, ரூ. 10 முகமதிப்பு கொண்ட ஒவ்வொரு பங்குக்கும் ரூ. 0.44 வீதம் ஈவுத்தொகை வழங்க வங்கியின் இயக்குநர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.

2026-27 நிதியாண்டில், பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டு, பல்வேறு முறைகள் வாயிலாக, தகுந்த பிரீமியத்துடன், ரூ. 10 முகமதிப்பு கொண்ட 270 கோடி பங்குகளை வெளியிட்டு, மொத்தம் ரூ. 2,700 கோடி பங்கு மூலதனத்தைத் திரட்டும் திட்டத்திற்கு இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

Summary

UCO Bank on Saturday reported a net profit to Rs 801 crore for the fourth quarter.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.