மும்பை: தனியார் துறை வங்கியான, ஆர்.பி.எல். வங்கியின் 2025-26 நிதியாண்டின் மார்ச் வரையான காலாண்டிற்கான நிகர லாபம், மூன்று மடங்கு அதிகரித்து ரூ. 230 கோடியாக இருப்பதாக வங்கி அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில் இது ரூ. 69 கோடியாக இருந்தது. அதே வேளையில், முழு நிதியாண்டான 2025-26ல், வங்கியின் நிகர லாபம் 18 சதவீதம் உயர்ந்து ரூ. 822 கோடியாக இருந்தது.
2026 நிதியாண்டின் 4வது காலாண்டில், வங்கியின் முக்கிய நிகர வட்டி வருமானம், ஆண்டு அடிப்படையில் 7 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ. 1,671 கோடியை எட்டியது. இதுவே கடந்த ஆண்டு ரூ. 1,563 கோடியாக இருந்தது.
வங்கியின் நிகர வட்டி வரம்பு, கடந்த ஆண்டு இருந்த 4.89 சதவீதத்திலிருந்து 4.41 சதவீதமாகவும், டிசம்பர் காலாண்டில் இது 4.63 சதவீதமாக சுருங்கியுள்ளது.
மொத்த வாராக்கடன் விகிதம், கடந்த ஆண்டின் இறுதியில் இருந்த 2.60 சதவீதத்திலிருந்து மேம்பட்டு, மார்ச் 2026 இறுதியில் இது 1.18 சதவீதமாகச் சரிந்துள்ளது.
Summary
RBL Bank said its March quarter FY26 standalone net profit more than tripled to Rs 230 crore.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










