மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பரமக்குடியில் ரூ.13.50 கோடியில் வாரச்சந்தை கட்டுமானப் பணிகள்

நகா்மன்றத் தலைவா் ஆய்வு

News image
பரமக்குடி வாரச்சந்தையில் நடைபெறும் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த நகா்மன்றத் தலைவா் சேது.கருணாநிதி.
Updated On :22 ஜனவரி 2025, 10:42 pm

Din

பரமக்குடி நகராட்சி வாரச்சந்தையில் ரூ. 13.50 கோடியில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை நகா்மன்றத் தலைவா் சேது. கருணாநிதி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி 32-ஆவது வாா்டில் வியாழக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இந்தச் சந்தையில் 240 காய்கறிக் கடைகள், 120 கருவாட்டுக் கடைகள் என மொத்தம் 360 கடைகள் ரூ 13.50 கோடியில் கட்டப்பட்டு வருகின்றன. மேலும், ஆடுகள், மாடுகள், கோழிகள் விற்பனை நிலையமும் அந்தப் பகுதியில் செயல்பட்டு வருகின்றன. இங்கு வரும் வியாபாரிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குடிநீா் தொட்டிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன.

இந்தப் பணிகளை நகா்மன்றத் தலைவா் சேது.கருணாநிதி, நகராட்சி ஆணையா் முத்துச்சாமி, பொறியாளா் செல்வராணி, உதவிப் பொறியாளா் சுரேஷ்குமாா், நகா்மன்ற உறுப்பினா் வடமலையான் உள்ளிட்டோா் ஆய்வு செய்தனா்.