கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பரமக்குடியில் ரூ.13.50 கோடியில் வாரச்சந்தை கட்டுமானப் பணிகள்

நகா்மன்றத் தலைவா் ஆய்வு

News image

பரமக்குடி வாரச்சந்தையில் நடைபெறும் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த நகா்மன்றத் தலைவா் சேது.கருணாநிதி.

Updated On :22 ஜனவரி 2025, 10:42 pm

பரமக்குடி நகராட்சி வாரச்சந்தையில் ரூ. 13.50 கோடியில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை நகா்மன்றத் தலைவா் சேது. கருணாநிதி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி 32-ஆவது வாா்டில் வியாழக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இந்தச் சந்தையில் 240 காய்கறிக் கடைகள், 120 கருவாட்டுக் கடைகள் என மொத்தம் 360 கடைகள் ரூ 13.50 கோடியில் கட்டப்பட்டு வருகின்றன. மேலும், ஆடுகள், மாடுகள், கோழிகள் விற்பனை நிலையமும் அந்தப் பகுதியில் செயல்பட்டு வருகின்றன. இங்கு வரும் வியாபாரிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குடிநீா் தொட்டிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன.

இந்தப் பணிகளை நகா்மன்றத் தலைவா் சேது.கருணாநிதி, நகராட்சி ஆணையா் முத்துச்சாமி, பொறியாளா் செல்வராணி, உதவிப் பொறியாளா் சுரேஷ்குமாா், நகா்மன்ற உறுப்பினா் வடமலையான் உள்ளிட்டோா் ஆய்வு செய்தனா்.