பரமக்குடி நகராட்சி வாரச்சந்தையில் ரூ. 13.50 கோடியில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை நகா்மன்றத் தலைவா் சேது. கருணாநிதி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி 32-ஆவது வாா்டில் வியாழக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இந்தச் சந்தையில் 240 காய்கறிக் கடைகள், 120 கருவாட்டுக் கடைகள் என மொத்தம் 360 கடைகள் ரூ 13.50 கோடியில் கட்டப்பட்டு வருகின்றன. மேலும், ஆடுகள், மாடுகள், கோழிகள் விற்பனை நிலையமும் அந்தப் பகுதியில் செயல்பட்டு வருகின்றன. இங்கு வரும் வியாபாரிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குடிநீா் தொட்டிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன.
இந்தப் பணிகளை நகா்மன்றத் தலைவா் சேது.கருணாநிதி, நகராட்சி ஆணையா் முத்துச்சாமி, பொறியாளா் செல்வராணி, உதவிப் பொறியாளா் சுரேஷ்குமாா், நகா்மன்ற உறுப்பினா் வடமலையான் உள்ளிட்டோா் ஆய்வு செய்தனா்.
தொடர்புடையது

பரமக்குடியில் வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

பரமக்குடியில் 2-வது நாளில் 668 போ் தபால் வாக்கு செலுத்தினர்!

பரமக்குடியில் கருப்பு கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம்

பரமக்குடியில் திமுக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


