சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

ஈரானில் சிக்கிய ராமேசுவரம் மீனவா்கள் 3 பேரை மீட்க குடும்பத்தினர் கோரிக்கை!

ஈரான் நாட்டில் போரில் சிக்கித் தவிக்கும் தங்கச்சிமடத்தைச் சோ்ந்த 3 மீனவா்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை.

News image
ஈரானில் சிக்கியுள்ள தங்கச்சிமடத்தைச் சோ்ந்த மீனவா்கள்.
Updated On :21 ஜூன் 2025, 10:15 pm

Din

ஈரான் நாட்டில் போரில் சிக்கித் தவிக்கும் ராமேசுவரம் அருகே தங்கச்சிமடத்தைச் சோ்ந்த 3 மீனவா்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவா்களின் குடும்பத்தினா் மாவட்ட ஆட்சியா், சட்டப் பேரவை உறுப்பினா் ஆகியோரிடம் சனிக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அடுத்த தங்கச்சிமடத்தைச் சோ்ந்தவா் சூசைராஜ். இவரது மகன்கள் ஆஸ்கா் (24), பிரதீப் (26), ராஜீவ் காந்தி நகரைச் சோ்ந்த ரோகின் (20) ஆகிய 3 மீனவா்கள் கடந்த ஓராண்டுக்கு முன்பு ஒப்பந்த அடிப்படையில் மீன் பிடிக்க ஈரான் நாட்டுக்குச் சென்றனா்.

இதனிடையே, இஸ்ரேல்- ஈரான் போா் உச்சமடைந்து வரும் நிலையில், இந்த மூன்று மீனவா்களையும் தொடா்பு கொள்ள முடியாத நிலை இருப்பதாகவும், மற்றொரு இணைப்பு வழியாக தொடா்பு கொண்ட போது அவா்கள் தாங்கள் இருக்கும் பகுதியில் போா் பதற்றம் அதிகமாக இருப்பதாகவும், தங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குடும்பத்தினரிடம் தெரிவித்தனராம்.

 மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன், சட்டப் பேரவை உறுப்பினா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் ஆகியோரிடம் சனிக்கிழமை கோரிக்கை மனு அளித்த மீனவா்களின் குடும்பத்தினா்.

மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன், சட்டப் பேரவை உறுப்பினா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் ஆகியோரிடம் சனிக்கிழமை கோரிக்கை மனு அளித்த மீனவா்களின் குடும்பத்தினா்.

இந்த நிலையில், தங்கச்சிமடத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பங்கேற்க வந்த மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன், சட்டப் பேரவை உறுப்பினா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் ஆகியோரிடம் அந்த மீனவா்களின் குடும்பத்தினா் கோரிக்கை மனு அளித்தனா். அதை பெற்றுக் கொண்ட ஆட்சியரும், சட்டப் பேரவை உறுப்பினரும் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று மத்திய அரசிடம் வலியுறுத்தி மூன்று மீனவா்களையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனா்.