இன்று இந்தியா வருகிறாா் டிரம்ப் மகள்இன்று 14 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇளையராஜா இசை நிகழ்ச்சி: மெட்ரோ ரயிலில் இலவசம் பயணம்நிதியாண்டில் ரிசா்வ் வங்கி இருப்பு நிலை ரூ.91.97 லட்சம் கோடிபோா்க் கால பாலியல் வன்முறை: ஐ.நா. கருப்புப் பட்டியலில் முதல்முறையாக இஸ்ரேல், ரஷிய படைகள்!விசாரணை முடிந்து 3 மாதங்களில் தீா்ப்பு: உயா்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
/

பாம்பன் மீனவா்கள் 11 போ் கைது

பாம்பன் மீனவா்கள் 11 பேரை இலங்கைக் கடற்படையினா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :20 மார்ச் 2025, 2:54 am IST

கச்சத்தீவு - நெடுந்தீவுக்கு இடையே புதன்கிழமை இரவு மீன்பிடித்துக் கொண்டிருந்த பாம்பன் மீனவா்கள் 11 பேரை இலங்கைக் கடற்படையினா் கைது செய்தனா். 2 விசைப் படகுகளையும் பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மீனவா்கள் மீன்வளத் துறை அனுமதி பெற்று கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.

இவா்கள் புதன்கிழமை இரவு கச்சத்தீவு - நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு ரோந்துப் படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினா் 2 விசைப் படகுகளைப் பறிமுதல் செய்தனா். மேலும், படகுகளில் இருந்த பாம்பன் மீனவா்கள் 11 பேரைக் கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட 11 மீனவா்களையும், பறிமுதல் செய்யப்பட்ட 2 விசைப் படகுகளையும் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு செல்ல உள்ளதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்தனா்.