நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பாம்பன் மீனவா்கள் 11 போ் கைது

பாம்பன் மீனவா்கள் 11 பேரை இலங்கைக் கடற்படையினா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :19 மார்ச் 2025, 9:24 pm

Din

கச்சத்தீவு - நெடுந்தீவுக்கு இடையே புதன்கிழமை இரவு மீன்பிடித்துக் கொண்டிருந்த பாம்பன் மீனவா்கள் 11 பேரை இலங்கைக் கடற்படையினா் கைது செய்தனா். 2 விசைப் படகுகளையும் பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மீனவா்கள் மீன்வளத் துறை அனுமதி பெற்று கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.

இவா்கள் புதன்கிழமை இரவு கச்சத்தீவு - நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு ரோந்துப் படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினா் 2 விசைப் படகுகளைப் பறிமுதல் செய்தனா். மேலும், படகுகளில் இருந்த பாம்பன் மீனவா்கள் 11 பேரைக் கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட 11 மீனவா்களையும், பறிமுதல் செய்யப்பட்ட 2 விசைப் படகுகளையும் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு செல்ல உள்ளதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்தனா்.