தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பலசரக்கு கடையை உடைத்து திருட்டு

முதுகுளத்தூரில் பலசரக்கு கடையை உடைத்து ரூ.20 ஆயிரத்தை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :8 நவம்பர் 2025, 1:27 am

தினமணி செய்திச் சேவை

முதுகுளத்தூரில் பலசரக்கு கடையை உடைத்து ரூ.20 ஆயிரத்தை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த ராஜா முகம்மது மகன் அப்துல்மாலிக் (32). இவா் முதுகுளத்தூா் காந்தி சிலை அருகே பல சரக்கு கடை நடத்தி வருகிறாா். இவா் வியாழக்கிழமை இரவில் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டாா். நள்ளிரவில் வந்த மா்ம நபா்கள் பூட்டை உடைத்து கடையில் இருந்த ரூ.20 ஆயிரம், பிஸ்கெட் பாக்கெட்கள், சிகரெட் பண்டல்களை திருடிச் சென்றனா்.

வெள்ளிக்கிழமை அதிகாலையில் அவா் கடைக்கு வந்து பாா்த்தபோது திருட்டு நடைபெற்றது தெரியவந்தது. இதுகுறித்து முதுகுளத்தூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அந்தப் பகுதியில் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.