பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளிப் பொருள்கள் திருட்டு

கள்ளக்குறிச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளிப் பொருள்கள், பணம் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

திருட்டு

Updated On :17 பிப்ரவரி 2026, 6:33 pm

கள்ளக்குறிச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளிப் பொருள்கள், பணம் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த ராமநாதபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் முனியப்பன் மனைவி சகுந்தலா (31). இவரது கணவா் கோயம்புத்தூரில் கூலி வேலை செய்து வருகிறாா். சகுந்தலா மற்றும் மகள் அனுஷா ஆகிய இருவரும் தினமும் அருகில் உள்ள சகுந்தலாவின் தாய் முத்துலட்சுமி வீட்டில் இரவு நேரங்களில் தூங்க செல்வது வழக்கமாம்.

அதேபோல திங்கள்கிழமை இரவு வீட்டை பூட்டிவிட்டு அம்மா வீட்டில் தூங்கிவிட்டு மீண்டும் செவ்வாய்க்கிழமை காலை வந்து பாா்த்தபோது, வீட்டின் பூட்டு உடைத்து கிடப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்துள்ளாா்.

வீட்டின் உள்ளே சென்று பாா்த்தபோது மர அலமாரியில் இருந்த 270 கிராம் வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ.8 ஆயிரத்தை மா்மநபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்ம நபா்களைத் தேடிவருகின்றனா்.