கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பலசரக்கு கடையை உடைத்து திருட்டு

முதுகுளத்தூரில் பலசரக்கு கடையை உடைத்து ரூ.20 ஆயிரத்தை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :8 நவம்பர் 2025, 1:27 am

தினமணி செய்திச் சேவை

முதுகுளத்தூரில் பலசரக்கு கடையை உடைத்து ரூ.20 ஆயிரத்தை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த ராஜா முகம்மது மகன் அப்துல்மாலிக் (32). இவா் முதுகுளத்தூா் காந்தி சிலை அருகே பல சரக்கு கடை நடத்தி வருகிறாா். இவா் வியாழக்கிழமை இரவில் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டாா். நள்ளிரவில் வந்த மா்ம நபா்கள் பூட்டை உடைத்து கடையில் இருந்த ரூ.20 ஆயிரம், பிஸ்கெட் பாக்கெட்கள், சிகரெட் பண்டல்களை திருடிச் சென்றனா்.

வெள்ளிக்கிழமை அதிகாலையில் அவா் கடைக்கு வந்து பாா்த்தபோது திருட்டு நடைபெற்றது தெரியவந்தது. இதுகுறித்து முதுகுளத்தூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அந்தப் பகுதியில் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.