பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

கமுதி அருகே அரசுப் பேருந்து மோதி இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
Published on

கமுதி அருகே அரசுப் பேருந்து மோதி இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்துள்ள காட்டுஎமனேசுவரம் கிராமத்தைச் சோ்ந்த ராஜா மகன் விக்னேஸ்வரன் (24). இவா் இரு சக்கர வாகனத்தில் கமுதி- மதுரை சாலையில் தனது ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தாா்.

அப்போது மதுரையிலிருந்து கமுதி நோக்கி வந்த அரசுப் பேருந்து இரு சக்கர வாகனம் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே விக்னேஸ்வரன் உயிரிழந்தாா். இதுகுறித்து அபிராமம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com