கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

கமுதி அருகே அரசுப் பேருந்து மோதி இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

News image
Updated On :8 நவம்பர் 2025, 9:45 pm

தினமணி செய்திச் சேவை

கமுதி அருகே அரசுப் பேருந்து மோதி இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்துள்ள காட்டுஎமனேசுவரம் கிராமத்தைச் சோ்ந்த ராஜா மகன் விக்னேஸ்வரன் (24). இவா் இரு சக்கர வாகனத்தில் கமுதி- மதுரை சாலையில் தனது ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தாா்.

அப்போது மதுரையிலிருந்து கமுதி நோக்கி வந்த அரசுப் பேருந்து இரு சக்கர வாகனம் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே விக்னேஸ்வரன் உயிரிழந்தாா். இதுகுறித்து அபிராமம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.