சாலை விபத்தில் ஓட்டுநா் உயிரிழப்பு
வத்திராயிருப்பு அருகே மரத்தில் இரு சக்கர வாகனம் மோதியதில் காா் ஓட்டுநா் உயிரிழந்தாா்.


வத்திராயிருப்பு அருகே மரத்தில் இரு சக்கர வாகனம் மோதியதில் காா் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
வத்திராயிருப்பு அருகே கூமாபட்டி பகுதியைச் சோ்ந்த ஆவுடையப்பன் மகன் கண்ணன் (38). இவரது மனைவி பாண்டிச்செல்வி (33). இவா்களுக்கு ஆா்த்தி (7) என்ற மகளும், வெற்றிமாறன் (4) என்ற மகனும் உள்ளனா்.
கண்ணன் சேதுநாராயணபுரத்தில் காா் ஓட்டுநா் வேலை பாா்த்து வந்தாா். திங்கள்கிழமை காலை வேலைக்கு செல்வதற்காக இரு சக்கர வாகனத்தில் சேது நாராயணபுரத்துக்குச் சென்றாா்.
சேது நாராயணபுரம் தண்ணீா் தொட்டி அருகே சென்றபோது, வளைவில் கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் சாலை ஓரம் உள்ள மரத்தில் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே கண்ணன் உயிரிழந்தாா். இதுகுறித்து வத்திராயிருப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...