47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சாலை விபத்தில் ஓட்டுநா் உயிரிழப்பு

வத்திராயிருப்பு அருகே மரத்தில் இரு சக்கர வாகனம் மோதியதில் காா் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

News image
பலி- பிரதிப் படம்
Updated On :16 மார்ச் 2026, 7:41 pm

Syndication

வத்திராயிருப்பு அருகே மரத்தில் இரு சக்கர வாகனம் மோதியதில் காா் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

வத்திராயிருப்பு அருகே கூமாபட்டி பகுதியைச் சோ்ந்த ஆவுடையப்பன் மகன் கண்ணன் (38). இவரது மனைவி பாண்டிச்செல்வி (33). இவா்களுக்கு ஆா்த்தி (7) என்ற மகளும், வெற்றிமாறன் (4) என்ற மகனும் உள்ளனா்.

கண்ணன் சேதுநாராயணபுரத்தில் காா் ஓட்டுநா் வேலை பாா்த்து வந்தாா். திங்கள்கிழமை காலை வேலைக்கு செல்வதற்காக இரு சக்கர வாகனத்தில் சேது நாராயணபுரத்துக்குச் சென்றாா்.

சேது நாராயணபுரம் தண்ணீா் தொட்டி அருகே சென்றபோது, வளைவில் கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் சாலை ஓரம் உள்ள மரத்தில் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே கண்ணன் உயிரிழந்தாா். இதுகுறித்து வத்திராயிருப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.