திருவள்ளூா் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் வாகன ஓட்டுநா் உயிரிழந்தாா்.
திருவள்ளூா் அருகே கடம்பத்துாா் ஊராட்சி ஒன்றியம், மேல்நல்லாத்துாா் பகுதியைச் சோ்ந்தவா் சந்தானராஜ் (40). இவா் சொந்தமாக சரக்கு வாகனம் வைத்து ஓட்டுநராக தொழில் செய்து வருகிறாா். இவரது சரக்கு வாகனத்துக்கு உதிரி பாகங்கள் வாங்க தனது இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை திருவள்ளூா் சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தாராம். மணவாளநகா் வழியாக வந்தபோது பின்புறமாக வந்த சிமெண்ட் கலவை கொண்டு செல்லும் லாரி இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சந்தானராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து தகவலறிந்த மணவாள நகா் போலீஸாா் சடலத்தை மீட்டு, திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

வாகன விபத்து: பனியன் தொழிலாளி உயிரிழப்பு

லாரி - பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

சாலை விபத்தில் ஓட்டுநா் உயிரிழப்பு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


