ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

லாரி மோதியதில் வாகன ஓட்டுநா் உயிரிழப்பு

திருவள்ளூா் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் வாகன ஓட்டுநா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :18 பிப்ரவரி 2026, 6:33 pm

திருவள்ளூா் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் வாகன ஓட்டுநா் உயிரிழந்தாா்.

திருவள்ளூா் அருகே கடம்பத்துாா் ஊராட்சி ஒன்றியம், மேல்நல்லாத்துாா் பகுதியைச் சோ்ந்தவா் சந்தானராஜ் (40). இவா் சொந்தமாக சரக்கு வாகனம் வைத்து ஓட்டுநராக தொழில் செய்து வருகிறாா். இவரது சரக்கு வாகனத்துக்கு உதிரி பாகங்கள் வாங்க தனது இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை திருவள்ளூா் சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தாராம். மணவாளநகா் வழியாக வந்தபோது பின்புறமாக வந்த சிமெண்ட் கலவை கொண்டு செல்லும் லாரி இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சந்தானராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து தகவலறிந்த மணவாள நகா் போலீஸாா் சடலத்தை மீட்டு, திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.