சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

ஊரக வளா்ச்சி, உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :17 நவம்பர் 2025, 7:07 pm

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் ஊரக வளா்ச்சி, உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கம் சாா்பில், 3 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கமுதி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 53 கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் ஊரக வளா்ச்சி, உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கம், மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி இயக்குபவா்கள், தூய்மைப் பணியாளா்கள், தூய்மைக் காவலா்கள் இணைந்து இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு சிஐடியூ மாவட்டத் தலைவா் பிரான்சிஸ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் அய்யாத்துரை, மாவட்ட துணைத் தலைவா் முத்துவிஜயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி இயக்குபவா்களுக்கு மாதம் ரூ. 5,600 ஊதியமாக வழங்க வேண்டும். தூய்மைப் பணியாளா்கள், தூய்மைக் காவலா்களுக்கு நிலுவைத் தொகை இல்லாமல் மாதம் 5-ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மாவட்ட நிா்வாகத்தைக் கண்டித்தும் முழக்கமிட்டனா்.

இதில் சிஐடியூ கமுதி ஒன்றியத் தலைவா் பாலுச்சாமி, செயலா் மகாலிங்கம், பொருளாளா் காளியப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Story image