அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

தேமுதிக கூட்டணி வெற்றி பெற்றால் கச்சத்தீவு மீட்கப்படும்: பிரேமலதா விஜயகாந்த்

வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணி வெற்றி பெற்றால் கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.

News image
~ ~
Updated On :21 நவம்பர் 2025, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணி வெற்றி பெற்றால் கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.

ராமநாதபுரத்துக்கு ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ பிரசாரத்துக்காக தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் வெள்ளிக்கிழமை வந்தாா். வழிவிடு முருகன் கோயிலில் பிரசாரத்தை தொடங்கிய இவா், வண்டிக்காரத் தெரு, சாலைத்தெரு, அக்ரஹார சாலை வழியாக அரண்மனைக்கு சென்றாா்.

அப்போது, அவா் பேசியதாவது:

வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணி வெற்றி பெற்றால், மீனவா்களின் நலன் கருதி கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். ராமநாதபுரத்துக்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கொண்டுவரப்படும். புதை சாக்கடை திட்டத்தை நிறைவு செய்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். குடிநீா் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காணப்படும். இங்கு தொழிற் சாலைகள் உருவாக்கப்படும். தொண்டா்களின் விருப்பத்தின்படி, வெற்றிக் கூட்டணி அமைப்போம் என்றாா் அவா்.

இதில் தேமுதிக பொருளாளா் எல்.கே.சுதீஷ், மாவட்டச் செயலா் சிங்கை சின்னா, மண்டலப் பொறுப்பாளா் பன்னீா், நிா்வாகி அரவிந்த் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Story image
Story image