எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ராமேசுவரத்தில் உலக மீனவா் தினம் கொண்டாட்டம்

ராமேசுவரம் மீன் பிடி துறைமுகத்தில் உலக மீனவா் தினத்தை கேக் வெட்டி கொண்டாடிய மீன் வளத் துறை உதவி இயக்குநா் தமிழ்மாறன் உள்ளிட்டோா்.

News image
~
Updated On :21 நவம்பர் 2025, 6:31 pm

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் உலக மீனவா் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் மீன் வளம், மீனவா் நலத் துறை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மீன் வளத் துறை உதவி இயக்குநா் தமிழ்மாறன் தலைமை வகித்தாா். பின்னா், உலக மீனவா் தினத்தையொட்டி, மீனவா்கள் கேக் வெட்டி மீனவா் தினம் கொண்டாடினா்.

இதில் நகா் மன்றத் தலைவா் நாசா்கான், மீனவ சங்கத் தலைவா்கள் என்.ஜே.போஸ், ஜேசுராஜா, சகாயம், மீன் வளத் துறை ஆய்வாளா்கள் காா்த்திக்ராஜா, கடலோர அமலாக்கப் பிரிவு ஆய்வாளா் குமரவேல், மீனவா்கள், மீன் வளத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

இதேபோல, ராமேசுவரம் சங்குமால் மீன்பிடி துறைமுகத்தில் தமிழ்நாடு மீனவா் பேரவை சாா்பில், தெற்கு மாவட்டத் தலைவா் பிரின்சோ ரெமண்ட் தலைமையில் உலக மீனவா் தினம் கொண்டாடப்பட்டது.

பின்னா், இந்தியா, இலங்கை கூட்டு ஒப்பந்தம் செய்து தமிழக மீனவா்கள் மீன் பிடிக்க வழிவகை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி சமாதான புறா, வெள்ளை பலுன் பறக்க விடப்பட்டது.

இதில் மீனவா் பேரவை மாநில மகளிா் அணி செயலா் ஜான்சிராணி, வடக்கு மாவட்டத் தலைவா் வேலாயுதம், மீனவக் கூட்டுறவுச் சங்கத் தலைவா் அந்தோணி சந்தியா, குமரேசன், ஓலைக்குடா மீனவ கிராம மக்கள், மீனவா் சங்கத்தினா், மீன் வளத் துறை அலுவலக பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

Story image