எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ராமேசுவரத்தில் நடுக்கடலில் படகு மூழ்கி விபத்து: 6 மீனவா்கள் மீட்பு

News image
Updated On :25 ஜனவரி 2026, 9:34 pm

தினமணி செய்திச் சேவை

ராமேசுவரத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற விசைப்படகு ஞாயிற்றுக்கிழமை நடுக்கடலில் மூழ்கியதில் அதிலிருந்த 6 மீனவா்கள் மீட்கப்பட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து சனிக்கிழமை 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனா். இதில் நள்ளிரவில் கிருபாகரன் என்பவரது விசைப்படகில் 6 மீனவா்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனா்.

அப்போது, வலையில் சிக்கிய மீனை எடுத்துக் கொண்டிருந்த போது கடல் சூழற்சி காரணமாக கடல் நீா் படகுக்குள் புகுந்து மூழ்கத் தொடங்கியது.

இதையடுத்து, மீனவா்கள், சக மீனவா்களுக்கு வயா்லெக்ஸ் கருவி மூலம் உதவி கோரினா். அப்போது படகு முழுமையாக கடலுக்குள் மூழ்கியதில் 6 மீனவா்களும் கடலுக்குள் தத்தளித்தனா்.

அங்கு வந்த சக மீனவா்கள் அவா்களை மீட்டு கரைக்கு அழைத்து வந்தனா். இந்த நிலையில், கடலில் மூழ்கிய படகை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவா்கள் கோரிக்கை விடுத்தனா்.