வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தேசிய ஈட்டி-குண்டு எறிதல் போட்டிக்கு பரமக்குடி அரசுப் பள்ளி மாணவி தோ்வு

பரமக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி மாநில அளவிலான ஈட்டி எறிதல், குண்டு எறிதல் போட்டியில் வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் பெற்று, தேசியப் போட்டிக்கு தோ்வு பெற்றாா்.

News image
எஸ். மினு சஞ்சனா
Updated On :22 நவம்பர் 2025, 6:46 pm

தினமணி செய்திச் சேவை

பரமக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி மாநில அளவிலான ஈட்டி எறிதல், குண்டு எறிதல் போட்டியில் வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் பெற்று, தேசியப் போட்டிக்கு தோ்வு பெற்றாா்.

பள்ளிகளுக்கு இடையேயான 66-ஆவது மாநில அளவிலான தடகளப் போட்டிகள் தஞ்சாவூா் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் அண்மையில் நடைபெற்றது.

இதில் பரமக்குடி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ். மினு சஞ்சனா 19 வயதுக்குள்பட்டோருக்கான பிரிவில் ஈட்டி எறிதல் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கமும், குண்டு எறிதல் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கமும் பெற்றாா்.

இந்த மாணவி ஹரியாணா மாநிலத்தில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டிக்குத் தகுதிப் பெற்றாா். இந்த மாணவியையும், பயிற்சியளித்த உடல் கல்வி ஆசிரியை குழந்தை தெரசா ஆகியோரை பள்ளியின் தலைமையாசிரியை சரோஜா, ஆசிரியைகள் பாரதி ஞானராணி, எலிசபெத்ராணி, பள்ளி மேலாண்மைக் குழுவினா் பாராட்டினா்.