எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

சமையல் தொழிலாளி கொலை: இருவா் கைது

News image
Updated On :23 நவம்பர் 2025, 8:05 pm

தினமணி செய்திச் சேவை

பாம்பனில் சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்கக் கோரி, புகாா் அளித்த சமையல் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில், இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் அன்னைநகரைச் சோ்ந்தவா் அன்சாரி (60). சமையல் தொழிலாளி. இவா் பாம்பன் பகுதியில் சட்டவிரோதமாக நடைபெறும் மது விற்பனையைத் தடுக்கக் கோரி, காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். மேலும், மது விற்பனையில் ஈடுபட்டவா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அன்சாரி தலையில் காயத்துடன் மீட்கப்பட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா்.

இதுகுறித்து பாம்பன் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். விசாரணையில், அக்காள்மடம் பகுதியைச் சோ்ந்த பிரகாஷ்ராஜ் (31), பாம்பன் லைட்ஹவுஸ் பகுதியைச் சோ்ந்த சேவியா் வா்க்கீஸ் (27) ஆகிய இருவரும் அன்னைநகா் பகுதியில் குடியிருப்புகள் அருகே அமா்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனராம்.

இவா்களை அன்சாரி கண்டித்தாராம். இதனால், ஆத்திரமடைந்த இருவரும் அன்சாரி தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, இவா்கள் இருவரையும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.