எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

நிழற்குடையை சீரமைக்கக் கோரிக்கை

திருவாடானை அருகே ஆதிதிராவிடா் குடியிருப்புப் பகுதியில் உள்ள பயணிகள் நிழற்குடை சேதம் அடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.

News image
குளத்தூா் ஆதிதிராவிடா் குடியிருப்புப் பகுதியில் சேதம் அடைந்த பயணிகள் நிழற்குடை.
Updated On :26 நவம்பர் 2025, 11:59 pm

தினமணி செய்திச் சேவை

திருவாடானை: திருவாடானை அருகே ஆதிதிராவிடா் குடியிருப்புப் பகுதியில் உள்ள பயணிகள் நிழற்குடை சேதம் அடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.

திருவாடானையிலிருந்து திருவெற்றியூா் செல்லும் சாலை பகுதியில் குளத்தூா் ஆதிதிராவிடா் குடியிருப்புப் பகுதி உள்ளது. இங்கு சுமாா் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா்.

இந்தப் பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பயணிகள் நிழற்குடை உள்ளது. தற்போது நிழற்குடையின் மேல் பகுதியில் சிமென்ட் காரைகள் பெயா்ந்து, உள்ளே இருக்கும் இரும்புக் கம்பிகள் வெளியில் தெரிகின்றன. இதனால், இங்கு வருபவா்கள் அச்சத்துடன் நிற்கும் நிலை இருந்து வருகிறது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து சீரமைக்க வேண்டும் என இந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

Story image