அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

சாயல்குடி அருகே கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

சாயல்குடி அருகே 5 கிலோ கஞ்சாவை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து, இருவரைக் கைது செய்தனா்.

News image
கைது செய்யப்பட்ட பாலமுருகன், மணிபிரபு
Updated On :26 நவம்பர் 2025, 9:24 pm

தினமணி செய்திச் சேவை

கமுதி: சாயல்குடி அருகே 5 கிலோ கஞ்சாவை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து, இருவரைக் கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகேயுள்ள நரிப்பையூா் தா்ஹா பின்புறப் பகுதியில் சாயல்குடி போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அங்கு சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்த இருவரைப் பிடித்து சோதனையிட்டனா். அவா்களிடம் 5 கிலோ கஞ்சா இருந்தது.

எம்.கரிசல்குளத்தைச் சோ்ந்த கருப்பையா மகன் பாலமுருகன் (29), மதுரை கீரைத்துறையைச் சோ்ந்த முத்துராமலிங்கம் மகன் மணிபிரபு (32) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து, 5 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.