அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

320 கிலோ புகையிலை பொருள் பறிமுதல்: இருவா் கைது

நீடாமங்கலம் அருகே 320 கிலோ புகையிலைப் பொருள் கடத்திய இருவரைப் போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :3 மார்ச் 2026, 9:27 pm

Syndication

நீடாமங்கலம் அருகே 320 கிலோ புகையிலைப் பொருள் கடத்திய இருவரைப் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருவாரூா் மாவட்ட காவல்கண்காணிப்பாளா் உத்தரவுப்படி நீடாமங்கலம் காவல் ஆய்வாளா் கலைவாணி மற்றும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை அதிகாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

நீடாமங்கலம் அருகே நகா் இருவழிச்சாலை பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் அதிவேகமாக வந்த காரை போலீஸாா் நிறுத்தி சோதனையிட்டனா். காரில் இருந்தவா்களிடம் விசாரித்தியபோது முன்னுக்குப்பின் முரணாக பேசினா்.

போலீஸாரின் விசாரணையில் ஒருவா் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த முகேஷ்குமாா் (28), மற்றொருவா் குஜராத் மாநிலத்தைச் சோ்ந்த சோமாபாய் (25) என்பதும் தெரியவந்தது.

காரில் அரசால் தடை செய்யப்பட்ட 320 கிலோ விமல் பாக்கு, கூலிப் மற்றும் போதை தரும் புகையிலைப் பொருட்கள் இருந்தது தெரியவந்தது. நீடாமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்து, காா், புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.