400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை

Updated On :26 செப்டம்பர் 2025, 2:29 am IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு கைத்தறி நெசவாளா் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சிறப்புத் தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

இதையடுத்து அவா் பேசியதாவது:

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் தீபாவளிப் பண்டிகைக்காக 30 சதவீத சிறப்புத் தள்ளுபடியுடன் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இதில், உடல் நலத்துக்கும், சுற்றுச் சூழலுக்கும் ஏற்ற வகையில் ரசாயனக் கலப்பின்றி இயற்கையான முறையில் உருவாக்கப்பட்ட பருத்தி ஆடைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேலும் காஞ்சிபுரம், ஆரணி, சேலம், திருப்புவனம் பட்டுச் சேலைகள், கோவை மென்பட்டுச் சேலைகள், பட்டு வேட்டிகள், கைத்தறி சுங்குடி சேலைகள், காஞ்சி காட்டன், செட்டிநாடு காட்டன், கோவை கோரா காட்டன், சேலம் காட்டன், பரமக்குடி காட்டன், திண்டுக்கல் காட்டன், அருப்புக்கோட்டை காட்டன் சேலைகள், குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை அனைவருக்குமான ஆடைகள் பல்வேறு ரகங்களில் இடம்பெற்றுள்ளன.

கோ-ஆப்டெக்ஸ் ஜவுளி ரகங்களை மின் வணிக வலைதளமான இணையம் மூலமாகவும் பெற்றுக் கொள்ளலாம். கோ-ஆப்டெக்ஸில் மாதாந்திரச் சேமிப்புத் திட்டமும் நடைமுறையில் உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு தீபாவளி விற்பனை ரூ.32.28 லட்சமாக இருந்தது. இந்த ஆண்டு ரூ.50 லட்சம், விற்பனை இலக்காக நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளா் பி.ஸ்டாலின், துணை மண்டல மேலாளா் தீபா, விற்பனை நிலைய மேலாளா் பாண்டியம்மாள், ராமநாதபுரம் நகா்மன்ற உறுப்பினா் இந்திரா மேரி செல்வம், வாடிக்கையாளா்கள், அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.