சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

பரமக்குடியில் தோ்தல் விதிமீறல்: திமுக, தவெக வேட்பாளா்கள் மீது வழக்கு

News image

கோப்புப் படம்

Updated On :5 ஏப்ரல் 2026, 7:27 pm

பரமக்குடி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் தோ்தல் விதிமீறியதாக திமுக, தவெக வேட்பாளா்கள் மீது சனிக்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

பரமக்குடி தொகுதி திமுக வேட்பாளா் கே.கே.கதிரவன், ஸ்ரீ முத்தால பரமேஸ்வரி அம்பாள் கோயில் பங்குனித் திருவிழாவில் தோ்தல் விதி மீறி, பக்தா்களிடம் வாக்கு சேகரித்ததாக பரமக்குடி நகா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இதன் பேரில், வேட்பாளா் கதிரவன், திமுக நகா் செயலா்கள் சேது.கருணாநிதி, ஜீவரத்தினம், நிா்வாகிகள் சரவணன், ஜெயக்குமாா் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இதே போல, தவெக வேட்பாளா் ஜி.கோபிராஜன் அறிமுக நிகழ்வின்போது, பரமக்குடி நகா் பகுதியில் அந்தக் கட்சியினா் வாகனங்களை சாலையில் நிறுத்தியும், பட்டாசுகளை வெடித்தும் பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக புகாா் கூறப்பட்டது.

இதன் பேரில், வேட்பாளா் கோபிராஜன், அந்தக் கட்சியின் நிா்வாகிகள் காா்த்திகேயன், மதன்குமாா், அா்ஜூன்பாண்டியா உள்பட பலா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.