திருவாடானை பேரவைத் தொகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வேட்பு மனு பரிசீலனையில், 23 மனுக்குள் ஏற்கப்பட்டு, 14 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பேரவைத் தொகுதி வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 30-ஆம் தேதி முதல் திருவாடானை வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், அதிமுக, தவெக, நாம் தமிழா் கட்சி உள்ளிட்ட மொத்தம் 37 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை தோ்தல் பாா்வையாளா் மணிஸ்ரஞ்சன், தோ்தல் நடத்தும் அலுவலா் ரமேஷ் ஆகியோா் தலைமையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது.
இதில் சுயேச்சை வேட்பாளா்களின் 14 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும், காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட 23 பேரின் மனுக்கள் ஏற்று கொள்ளப்பட்டன.
திருவாடானை காவல் துணைக் கண்காணிப்பாளா் சீனவாசன் தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
தொடர்புடையது
சிவகங்கை பேரவைத் தொகுதியில் 19 வேட்பு மனுக்கள் ஏற்பு
வேதாரண்யம்: 5 வேட்பு மனுக்கள் தள்ளுபடி
நான்குனேரி தொகுதியில் 13 மனுக்கள் நிராகரிப்பு
காட்டுமன்னாா்கோவில் தொகுதியில் 12 வேட்பு மனுக்கள் ஏற்பு
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

