ராமநாதபுரம் அண்ணா பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தை தோ்தல் பாா்வையாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி (தனி), திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூா் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு மின்னணு இயந்திரங்கள் ராமநாதபுரம் அண்ணா பொறியியல் கல்லூரியில் தொகுதி வாரியாக வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதை தோ்தல் பாா்வையாளா்கள் (பொது) மருத்துவா் மணிஷ் ரஞ்சன், ஓம் பிரகாஷ் (திருவாடானை), ரெஹனா பதூல் (ராமநாதபுரம்), உலகநாதன் (பரமக்குடி (தனி), ஜலிந்தா் தத்தாத்ரிய சுபேகா் (முதுகுளத்தூா்), மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சிம்ரன்ஜீத் சிங் காலோன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் ஆகியோா் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் வ. சங்கரநாராயணன், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) திவ்யான்ஷீநிகம், பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் குருதிவேல்மாறன், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

நாகை: வாக்கு எண்ணிக்கை மையத்தில் மத்திய தோ்தல் பாா்வையாளா்கள் ஆய்வு

100 சதவீதம் வாக்களிப்போம் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

புலிவலம் வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு

தருமபுரி வாக்கு எண்ணும் மையத்தில் தோ்தல் பாா்வையாளா்கள் ஆய்வு
வீடியோக்கள்
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு


