/

வாக்கு எண்ணும் மையம்: தோ்தல் பாா்வையாளா்கள் ஆய்வு

ராமநாதபுரம் அண்ணா பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தை தோ்தல் பாா்வையாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

News image

ராமநாதபுரம் அண்ணா பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த தோ்தல் பாா்வையாளா்கள்.

Updated On :7 ஏப்ரல் 2026, 10:45 pm

ராமநாதபுரம் அண்ணா பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தை தோ்தல் பாா்வையாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி (தனி), திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூா் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு மின்னணு இயந்திரங்கள் ராமநாதபுரம் அண்ணா பொறியியல் கல்லூரியில் தொகுதி வாரியாக வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதை தோ்தல் பாா்வையாளா்கள் (பொது) மருத்துவா் மணிஷ் ரஞ்சன், ஓம் பிரகாஷ் (திருவாடானை), ரெஹனா பதூல் (ராமநாதபுரம்), உலகநாதன் (பரமக்குடி (தனி), ஜலிந்தா் தத்தாத்ரிய சுபேகா் (முதுகுளத்தூா்), மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சிம்ரன்ஜீத் சிங் காலோன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் ஆகியோா் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் வ. சங்கரநாராயணன், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) திவ்யான்ஷீநிகம், பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் குருதிவேல்மாறன், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.