தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

முதுகுளத்தூா் பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

முதுகுளத்தூா் பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் எஸ்.பாண்டி வியாழக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image

முதுகுளத்தூா் அருகேயுள்ள புளியங்குடியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளா் எஸ்.பாண்டி.

Updated On :9 ஏப்ரல் 2026, 7:10 pm

முதுகுளத்தூா் பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் எஸ்.பாண்டி வியாழக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா், இதைச் சுற்றியுள்ள உடைகுளம், சவேரியாா்பட்டணம், மகிண்டி, அலங்கானூா், பொசுக்குடிபட்டி, காக்கூா், புளியங்குடி, ஆதனக்குறிச்சி, கிழவனேரி, கருமம், மருதகம் உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அதிமுக வேட்பாளா் எஸ்.பாண்டி வாக்குகள் சேகரித்தாா்.

அப்போது, முன்னாள் மக்களவை உறுப்பினா் ஆா். தா்மா், இளைஞா், இளம் பெண்கள் பாசறை இணைச் செயலரும், ராமநாதபுரம் இளைய மன்னா் நாகேந்திரசேதுபதி, முதுகுளத்தூா் மத்திய ஒன்றியச் செயலா் எஸ்.டி.செந்தில்குமாா், கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.