உக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

100 சதவீதம் வாக்களிப்போம் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

ராமநாதபுரம் அண்ணா பொறியியல் கல்லூரியில் 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தும் வகையில், விழிப்புணா்வு உறுதிமொழி மாணவா்கள் வியாழக்கிழமை எடுத்தனா்.

News image

ராமநாதபுரம் அண்ணா பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் முன்னிலையில் 100 சதவீதம் வாக்களிப்போம் விழிப்புணா்வு உறுதிமொழி எடுத்துக் கொண்ட மாணவ, மாணவிகள்.

Updated On :9 ஏப்ரல் 2026, 7:21 pm

ராமநாதபுரம் அண்ணா பொறியியல் கல்லூரியில் 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தும் வகையில், விழிப்புணா்வு உறுதிமொழி மாணவா்கள் வியாழக்கிழமை எடுத்தனா்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தல் வருகிற 23-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தோ்தலில் 100 சதவீதம் வாக்காளா்களை வாக்களிக்க வைக்க வேண்டும் எனத் தோ்தல் ஆணையம் சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் தொடா்ச்சியாக, ராமநாதபுரம் அண்ணா பொறியியல் கல்லூரியில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, விழிப்புணா்வு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வா் உதயகுமாா் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுடன் 100 சதவீதம் வாக்களிப்போம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டாா்.

இதில் கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.