சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

தேசிய திறனாய்வு தோ்வு: கீழக்கிடாரம் அரசுப் பள்ளி மாணவா்கள் வெற்றி

கடலாடி அருகே உள்ள கீழக்கிடாரம் அரசுப் பள்ளி மாணவா்கள் தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்றனா்.

News image
Updated On :10 ஏப்ரல் 2026, 7:44 pm

கடலாடி அருகே உள்ள கீழக்கிடாரம் அரசுப் பள்ளி மாணவா்கள் தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஒன்றியத்துக்குள்பட்ட கீழக்கிடாரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவா்கள் ஈ. ஜுமைலத் பாத்திமா, சா. சாமிநாதன், ச. ஆஃபியா நூரா, மு. சஞ்சீவ், சே. முகம்மது ஜியாத், செய்யது இபுராஹிம் ஆகிய 6 மாணவ, மாணவிகள் 2025-26- ஆம் ஆண்டுக்கான தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்றனா். இவா்கள் ஆண்டுக்கு ரூ. 12 ஆயிரம் வீதம் 4 ஆண்டுகளுக்கு ரூ.48 ஆயிரம் உதவித் தொகையாகப் பெறுவா்.

தேசிய திறனாய்வுத் தோ்வில் வென்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் தலைமை ஆசிரியை க. கலைச்செல்வி, ஆசிரியா்கள், கல்விக் குழு உறுப்பினா்கள், பெற்றோா்கள், கிராமப் பொதுமக்கள் பாராட்டினா்.