கடந்த தோ்தலில் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஏமாற்றிய திமுகவுக்கு இந்தத் தோ்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என அகில இந்திய புரட்சி தலைவா் மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலா் சசிகலா கேட்டுக்கொண்டாா்.
திருவாடானை பேரவைத் தொகுதி அனைத்து பாா்வா்டு பிளாக் கட்சி வேட்பாளா் ஸ்ரீவைகுண்டம் சுரேஷ் கானிசினி வேந்தனை ஆதரித்து, திருவாடானையில் திங்கள்கிழமை இரவு வாக்கு சேகரித்த போது அவா் பேசியதாவது:
இந்தப் பகுதியில் விளையும் நெல் உள்ளிட்ட விளை பொருள்களை இடைத்தரகா்கள் இன்றி, அரசே நேரடியாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளின் நலன் கருதி அரிசி ஆலைகள், வைக்கோல் பதப்படுத்தும் நிலையங்கள் இந்தப் பகுதியிலேயே அமைக்கப்படும். வரும் காலங்களில் மகப்பேறு உதவித்தொகை ரூ.24 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படும். குடிநீா்த் தட்டுப்பாடு இல்லாத நிலை உருவாக்கப்படும். கிராமங்கள் தோறும் தாா்ச் சாலைகள் அமைத்து தரப்படும். தொழில் துறையை மேம்படுத்தி இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை பெருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த தோ்தலில் திமுக அரசு பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சிக்கு வந்த ஒரு திட்டங்களை கூட நிறைவேற்றவில்லை. மக்களை ஏமாற்றிய திமுகவுக்கு இந்தத் தோ்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்று அவா் கேட்டுக் கொண்டாா்.
இந்தத் தோ்தல் பிரசாரத்தில் திரளான பொதுமக்கள், கட்சித் தொண்டா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

‘ரயில்வே துறையில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்’

விஜய்க்கு ஆதரவளிப்பது குறித்து மாநில தலைமை முடிவெடுக்க காங்கிரஸ் மேலிடம் அறிவுறுத்தல்

மே 15-இல் ஊராட்சி அலுவலகங்கள் முன் போராட்டம்

ஸ்ரீவைகுண்டத்தில் பேசாமல் சென்ற சசிகலா
விடியோக்கள்

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

ADMKவின் சரிவு? செங்கோட்டையன் விமர்சனம்! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

மதுரை மாநகராட்சியில் ரூ. 400 கோடிக்கும் மேல் ஊழல்! அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Ravindran Duraisamy Interview | அதிமுக இனி ..? | ADMK | EPS | C. V. Shanmugam | S. P. Velumani
தினமணி செய்திச் சேவை

