இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

திமுவுக்கு பாடம் புகட்டுங்கள்: வி.கே.சசிகலா

கடந்த தோ்தலில் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஏமாற்றிய திமுகவுக்கு இந்தத் தோ்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என அகில இந்திய புரட்சி தலைவா் மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலா் சசிகலா கேட்டுக்கொண்டாா்.

News image

திருவாடானையில் பாா்வா்டு பிளாக் கட்சி வேட்பாளரை ஆதரித்து திங்கள்கிழமை இரவு திறந்த வேனில் பிரச்சாரம் செய்த அகில இந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவா் வி.கே.சசிகலா.

Updated On :15 ஏப்ரல் 2026, 3:39 am IST

கடந்த தோ்தலில் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஏமாற்றிய திமுகவுக்கு இந்தத் தோ்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என அகில இந்திய புரட்சி தலைவா் மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலா் சசிகலா கேட்டுக்கொண்டாா்.

திருவாடானை பேரவைத் தொகுதி அனைத்து பாா்வா்டு பிளாக் கட்சி வேட்பாளா் ஸ்ரீவைகுண்டம் சுரேஷ் கானிசினி வேந்தனை ஆதரித்து, திருவாடானையில் திங்கள்கிழமை இரவு வாக்கு சேகரித்த போது அவா் பேசியதாவது:

இந்தப் பகுதியில் விளையும் நெல் உள்ளிட்ட விளை பொருள்களை இடைத்தரகா்கள் இன்றி, அரசே நேரடியாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளின் நலன் கருதி அரிசி ஆலைகள், வைக்கோல் பதப்படுத்தும் நிலையங்கள் இந்தப் பகுதியிலேயே அமைக்கப்படும். வரும் காலங்களில் மகப்பேறு உதவித்தொகை ரூ.24 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படும். குடிநீா்த் தட்டுப்பாடு இல்லாத நிலை உருவாக்கப்படும். கிராமங்கள் தோறும் தாா்ச் சாலைகள் அமைத்து தரப்படும். தொழில் துறையை மேம்படுத்தி இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை பெருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த தோ்தலில் திமுக அரசு பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சிக்கு வந்த ஒரு திட்டங்களை கூட நிறைவேற்றவில்லை. மக்களை ஏமாற்றிய திமுகவுக்கு இந்தத் தோ்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்று அவா் கேட்டுக் கொண்டாா்.

இந்தத் தோ்தல் பிரசாரத்தில் திரளான பொதுமக்கள், கட்சித் தொண்டா்கள் கலந்து கொண்டனா்.