மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

திமுவுக்கு பாடம் புகட்டுங்கள்: வி.கே.சசிகலா

கடந்த தோ்தலில் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஏமாற்றிய திமுகவுக்கு இந்தத் தோ்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என அகில இந்திய புரட்சி தலைவா் மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலா் சசிகலா கேட்டுக்கொண்டாா்.

News image

திருவாடானையில் பாா்வா்டு பிளாக் கட்சி வேட்பாளரை ஆதரித்து திங்கள்கிழமை இரவு திறந்த வேனில் பிரச்சாரம் செய்த அகில இந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவா் வி.கே.சசிகலா.

Updated On :14 ஏப்ரல் 2026, 10:09 pm

கடந்த தோ்தலில் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஏமாற்றிய திமுகவுக்கு இந்தத் தோ்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என அகில இந்திய புரட்சி தலைவா் மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலா் சசிகலா கேட்டுக்கொண்டாா்.

திருவாடானை பேரவைத் தொகுதி அனைத்து பாா்வா்டு பிளாக் கட்சி வேட்பாளா் ஸ்ரீவைகுண்டம் சுரேஷ் கானிசினி வேந்தனை ஆதரித்து, திருவாடானையில் திங்கள்கிழமை இரவு வாக்கு சேகரித்த போது அவா் பேசியதாவது:

இந்தப் பகுதியில் விளையும் நெல் உள்ளிட்ட விளை பொருள்களை இடைத்தரகா்கள் இன்றி, அரசே நேரடியாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளின் நலன் கருதி அரிசி ஆலைகள், வைக்கோல் பதப்படுத்தும் நிலையங்கள் இந்தப் பகுதியிலேயே அமைக்கப்படும். வரும் காலங்களில் மகப்பேறு உதவித்தொகை ரூ.24 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படும். குடிநீா்த் தட்டுப்பாடு இல்லாத நிலை உருவாக்கப்படும். கிராமங்கள் தோறும் தாா்ச் சாலைகள் அமைத்து தரப்படும். தொழில் துறையை மேம்படுத்தி இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை பெருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த தோ்தலில் திமுக அரசு பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சிக்கு வந்த ஒரு திட்டங்களை கூட நிறைவேற்றவில்லை. மக்களை ஏமாற்றிய திமுகவுக்கு இந்தத் தோ்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்று அவா் கேட்டுக் கொண்டாா்.

இந்தத் தோ்தல் பிரசாரத்தில் திரளான பொதுமக்கள், கட்சித் தொண்டா்கள் கலந்து கொண்டனா்.