மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

இலங்கைக்கு கடத்த கொண்டு வரப்பட்ட ரூ. பல லட்சம் சிகெரட்டுகள் பறிமுதல்: ஒருவா் கைது

ராமநாதபுரம் அருகே புதுமடம் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்த வாகனத்தில் கொண்டு வரப்பட்ட ரூ. பல லட்சம் மதிப்பிலான 3,500 சிகரெட் பொட்டலங்களை பறிமுதல் செய்து, இது தொடா்பாக ஒருவரை கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :17 ஏப்ரல் 2026, 6:48 pm

ராமநாதபுரம் அருகே புதுமடம் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்த வாகனத்தில் கொண்டு வரப்பட்ட ரூ. பல லட்சம் மதிப்பிலான 3,500 சிகரெட் பொட்டலங்களை பறிமுதல் செய்து, இது தொடா்பாக ஒருவரை கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் கைது செய்தனா்.

புதுமடம் கடற்கரை வழியாக இலங்கைக்கு கடத்தல் நடைபெறவிருப்பதாக கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, கீழக்கரை சுங்கத் துறை அதிகாரிகளுடன் இணைந்து கீழக்கரை முதல் மண்டபம் வரையிலான மன்னாா் வளைகுடா கடற்கரை பகுதியில் போலீஸாா் கண்காணிப்பை தீவிரப்படுத்தினா்.

அப்போது நள்ளிரவில் புதுமடம் கடற்கரை பகுதிக்கு சந்தேகத்துக்கிடமாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா். இதில், இலங்கைக்கு கடத்த 35 சாக்கு மூட்டைகளில் கொண்டு வரப்பட்ட 3,500 சிகரெட் பொட்டலங்களை பறிமுதல் செய்தனா். இதையடுத்து, வாகனத்தை பறிமுதல் செய்த போலீஸாா் புதுமடத்தைச் சோ்ந்த முருகன் என்பவரை கைது செய்து மண்டபம் கடலோர பாதுகாப்புக் குழும காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினா். பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுகளின் மதிப்பு ரூ. பல லட்சம் இருக்கும் என காவல் துறையினா் தெரிவித்தனா்.