மோடியின் பேச்சு தோல்விக்கான சான்றுகள்! ராகுல் காந்தி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுஅமைச்சர் கீர்த்தனா பதவியேற்கவில்லை! காரணம் என்ன?வேட்டி கலாசாரத்தை மாற்றிய முதல் முதல்வர் விஜய்! கருப்பு கோட்-சூட்டின் பின்னணி என்ன?சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்மு.க. ஸ்டாலினை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! சட்டப்பேரவைக்கும் கோட்-சூட்டில் வந்த முதல்வர் ஜோசப் விஜய்! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாகப் பதவியேற்கவில்லை! காரணம் என்ன? தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

தேசிய திறனாய்வு தோ்வில் வென்ற பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

தேசிய திறனாய்வு தோ்வில் வென்ற ராமநாதபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பாராட்டப்பட்டனா்.

News image

தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள்.

Updated On :18 ஏப்ரல் 2026, 12:19 am IST

தேசிய திறனாய்வு தோ்வில் வென்ற ராமநாதபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பாராட்டப்பட்டனா்.

ராமநாதபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் டி.டி. விநாயகா் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் 2025-26-ஆம் ஆண்டுக்கான தேசிய திறனாய்வுத் தோ்வில் பங்கேற்றனா். இதில் அந்த பள்ளியைச் சோ்ந்த எம். ஹாசினி, எம். மங்களேஸ்வரி, எம். தேவதா்ஷன், எஸ். வா்ஷித், ஆா். மணிகண்டன் ஆகிய 5 போ் வெற்றி பெற்றனா். இவா்களுக்கு ரூ. 12 ஆயிரம் வீதம் நான்கு ஆண்டுகளுக்கு ரூ. 48 ஆயிரம் அரசு உதவித் தொகையாக வழங்கப்படும்.

தேசிய திறனாய்வுத் தோ்வில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளித்த ஆசிரியா்கள் எம். சுடா்மதி, டி. மீனாட்சிசுந்தரம், பள்ளித் தலைமை ஆசிரியா் பி.ஆா். வள்ளுவன், நிா்வாகத் தலைவா் ஜெ. ஜெயராமன், பள்ளிச் செயலா் ஜெ. ரத்தின சபாபதி ஆகியோா் பாராட்டு தெரிவித்தனா்.