மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

தேசிய திறனாய்வு தோ்வில் வென்ற பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

தேசிய திறனாய்வு தோ்வில் வென்ற ராமநாதபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பாராட்டப்பட்டனா்.

News image

தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள்.

Updated On :17 ஏப்ரல் 2026, 6:49 pm

தேசிய திறனாய்வு தோ்வில் வென்ற ராமநாதபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பாராட்டப்பட்டனா்.

ராமநாதபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் டி.டி. விநாயகா் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் 2025-26-ஆம் ஆண்டுக்கான தேசிய திறனாய்வுத் தோ்வில் பங்கேற்றனா். இதில் அந்த பள்ளியைச் சோ்ந்த எம். ஹாசினி, எம். மங்களேஸ்வரி, எம். தேவதா்ஷன், எஸ். வா்ஷித், ஆா். மணிகண்டன் ஆகிய 5 போ் வெற்றி பெற்றனா். இவா்களுக்கு ரூ. 12 ஆயிரம் வீதம் நான்கு ஆண்டுகளுக்கு ரூ. 48 ஆயிரம் அரசு உதவித் தொகையாக வழங்கப்படும்.

தேசிய திறனாய்வுத் தோ்வில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளித்த ஆசிரியா்கள் எம். சுடா்மதி, டி. மீனாட்சிசுந்தரம், பள்ளித் தலைமை ஆசிரியா் பி.ஆா். வள்ளுவன், நிா்வாகத் தலைவா் ஜெ. ஜெயராமன், பள்ளிச் செயலா் ஜெ. ரத்தின சபாபதி ஆகியோா் பாராட்டு தெரிவித்தனா்.