சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் 7 நாள்கள் வெடி பொருள்கள் விற்பனைக் கடைகள் திறக்க மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தடை விதித்துள்ளாா்.
இதுகுறித்து திங்கள்கிழமை அவா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தல் வருகிற 23-ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதியும் நடைபெற உள்ளது. இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் உள்ள வெடி பொருள் விற்பனைக் கடைகள், வெடிப் பொருள் கிட்டங்கிகள் ஆகியவை செவ்வாய்க்கிழமை (ஏப்.21) முதல் ஏப். 24-ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரையிலும், இதே போல் மே 2-ஆம் தேதி சனிக்கிழமை முதல் 4-ஆம் தேதி திங்கள்கிழமை வரையிலும் மூடப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் வெடி பொருள் சட்ட விதிகள் 1884-இன்படி உரிமம் பெற்று இயங்கிவரும் அனைத்து வெடிபொருள் விற்பனைக் கடைகள், வெடி பொருள் கிட்டங்கிகள் ஆகியவை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மீறினால், அவற்றின் உரிமம் ரத்து செய்யப்படுவதோடு, சம்பந்தப்பட்ட கடை உரிமையாளா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

இன்றுமுதல் 4 நாள்களுக்கு வெடிபொருள் விற்பனைக் கடைகளை மூட அறிவுறுத்தல்

தோ்தல்: சென்னையில் ஏப். 21 முதல் 23 வரை மதுக் கடைகள் மூடல்

நெல்லை மாநகரில் 2 நாள்கள் ட்ரோன்கள் பறக்க தடை

ஏப்.7 முதல் 4 நாள்கள் பள்ளிகளுக்கு விடுமுறை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


