சாயல்குடி அருகே செவ்வாய்க்கிழமை சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 320 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியை அடுத்த நரிப்பையூா் மதுக் கடையின் பின்புறம் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக சாயல்குடி காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அந்தப் பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் மணிகண்டன், எஸ்.பி. தனிப் பிரிவு காவலா் முருகபூபதி தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு மதுக் கடைக்குப் பின்புறம் மறைவான இடத்தில் வைத்து சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, மது விற்பனையில் ஈடுபட்ட நரிப்பையூா் கிராமத்தைச் சோ்ந்த முருகேசன் மகன் சத்தியநாதனை (48) கைது செய்து, அவரிடமிருந்து 320 மதுப் புட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது

புதுச்சேரி மதுப் புட்டிகள் கடத்தல்: இளைஞா் கைது

அருப்புக்கோட்டையில் சட்டவிரோதமாக மதுப் புட்டிகள் விற்பனை!
முத்தூரில் மதுபானம் விற்றவா் கைது

சட்டவிரோதமாக ஆட்டோவில் விற்றுவந்த 77 மது புட்டிகள் பறிமுதல்
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

