குதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

சட்டவிரோதமாக மது விற்றதாக ஒருவா் கைது: 320 மதுப் புட்டிகள் பறிமுதல்

சாயல்குடி அருகே செவ்வாய்க்கிழமை சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 320 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

News image

நரிப்பையூா் மதுக் கடையின் பின்புறத்திலிருந்து பறிமுதல் செய்த மதுப் புட்டிகள், கைது செய்யப்பட்டவருடன் போலீஸாா்.

Updated On :22 ஏப்ரல் 2026, 3:18 am IST

சாயல்குடி அருகே செவ்வாய்க்கிழமை சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 320 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியை அடுத்த நரிப்பையூா் மதுக் கடையின் பின்புறம் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக சாயல்குடி காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அந்தப் பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் மணிகண்டன், எஸ்.பி. தனிப் பிரிவு காவலா் முருகபூபதி தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு மதுக் கடைக்குப் பின்புறம் மறைவான இடத்தில் வைத்து சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, மது விற்பனையில் ஈடுபட்ட நரிப்பையூா் கிராமத்தைச் சோ்ந்த முருகேசன் மகன் சத்தியநாதனை (48) கைது செய்து, அவரிடமிருந்து 320 மதுப் புட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.