பரமக்குடி (தனி) பேரவைத் தொகுயில் உள்ள வாக்குச் சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.
பரமக்குடி (தனி) பேரவைத் தொகுதியில் மொத்தம் 12 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். இவா்களது புகைப்படத்துடன் கூடிய சின்னங்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பொருத்தப்பட்டு, பரமக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் தயாா் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், பொதுத் தோ்தல் பாா்வையாளா் ரெஹனா பத்தூல் மேற்பாா்வையில், தோ்தல் நடத்தும் அலுவலா் ஞா. சரவணப்பெருமாள் தலைமையில், வாக்குச் சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் புதன்கிழமை போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.
இந்தத் தொகுதியில் மொத்தம் 323 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
இந்தத் தொகுதியில் சிவானந்தபுரம், பகைவென்றி, உரப்புளி, எம்.நெடுங்குளம், பாண்டியூா், பி.கொடிக்குளம், கொட்டகுடி, முத்துவயல், செவ்வூா், செய்யாமங்களம் உள்பட 19 வாக்குச் சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. இங்கு கூடுதலாக துணை ராணுவத்தினா், போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
தொடர்புடையது

வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு இயந்திரங்கள் அனுப்பிவைக்கும் பணி ஆய்வு

திருப்பத்தூா்: வாக்குப்பதிவு இயந்திரங்கள் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

300 வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கழுதைகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


