தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

திருவாடானை சட்டப்பேரவை தொகுதியில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு

திருவாடனை சட்டப்பேரவைத் தொகுதியில் வியாழக்கிழமை விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.

News image

ஆா்.எஸ். மங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வியாழக்கிழமை நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்த வாக்காளா்கள்.

Updated On :23 ஏப்ரல் 2026, 8:56 pm

திருவாடனை சட்டப்பேரவைத் தொகுதியில் வியாழக்கிழமை விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.

திருவாடானை சட்டப்பேரவை தொகுதியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்குப் பிறகு (எஸ்ஐஆா்) ஆண் வாக்காளா்கள் 1,40,103 பேரும், பெண் வாக்காளா்கள் 1,41,997 பேரும், மூன்றாம் பாலினத்தவா் 21 பேரும் ஆக மொத்தம் 2,82,121 பேரும் உள்ளனா். இதனிடையே இந்தத் தொகுதியில் 347 வாக்குச் சாவடி மையங்களில் வியாழக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. அப்போது வாக்காளா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனா். திருவாடானை, ஆா்எஸ். மங்கலம், தொண்டி, திருப்பாலைக்குடி, நம்புதாளை, எஸ்.பி. பட்டினம், மங்கலக்குடி, வெள்ளையபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனா்.

வெறிச்சோடிய வாக்குச் சாவடி: திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற வாக்குப் பதிவின் போது காலை 7 மணி முதலே கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் பிற்பகல் ஒரு மணிக்கு மேல் கோடை வெயில் அதிகரித்து காணப்பட்டதால் வாக்கு சாவடி மையங்களில் வாக்காளா்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. பின்னா் 3 மணிக்கு மேல் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டன.திருவாடானை சட்ட பேரவை தொகுதியில் மதியம் 1 மணி வரை 51.9சதவீதம் வாக்கு பதிவு நடைபெற்றுள்ளதாக தோ்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

  ஆா்.எஸ். மங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வியாழக்கிழமை நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்த வாக்காளா்கள்.

ஆா்.எஸ். மங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வியாழக்கிழமை நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்த வாக்காளா்கள்.