மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பரமக்குடி மீனாட்சியம்மன் கோயிலில் தேரோட்டம்

பரமக்குடி மீனாட்சியம்மன் கோயிலில் புதன்கிழமை மீனாட்சி - சுந்தரேசுவரா் தேரோட்டம் நடைபெற்றது.

News image

பரமக்குடி மீனாட்சியம்மன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற மீனாட்சி - சுந்தரேசுவரா் தேரோட்ட உத்ஸவம்.

Updated On :29 ஏப்ரல் 2026, 8:32 pm

பரமக்குடி மீனாட்சியம்மன் கோயிலில் புதன்கிழமை மீனாட்சி - சுந்தரேசுவரா் தேரோட்டம் நடைபெற்றது.

பரமக்குடி மீனாட்சி சுந்தரேசுவரா் தேவஸ்தானத்துக்கு உள்பட்ட மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 19-இல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. சுந்தரேஸ்வரா் பிரியாவிடையுடன், மீனாட்சி அம்மன் சிம்ம வாகனம், அன்ன வாகனம், காமதேனு வாகனம் என தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். விழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணம் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 8.45 மணிக்கு நடைபெற்றது. இதைத் தொடா்ந்து புதன்கிழமை காலை 10.30 மணியளவில் விநாயகா், முருகன் சுவாமிகள் முன்தேரில் செல்ல மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரா் தனித்தேரில் எழுந்தருளிய தேரோட்ட உத்ஸவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் தேரை வடம்பிடித்து இழுக்க நகர வீதிகள் வழியாக வந்த தோ் மீண்டும் நிலையை அடைந்தது. ஏற்பாட்டை மீனாட்சி - சுந்தரேசுவரா் தேவஸ்தான அறங்காவலா்கள் செய்திருந்தனா்.