6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

உத்திரகோஷமங்கை மங்களநாதசுவாமி கோயில் தேரோட்டம்

உத்திரகோஷமங்கை மங்களநாத சுவாமி கோயிலில் சித்திரை திருவிழாவையொட்டி வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

News image

உத்திரகோஷமங்கை மங்களநாதசுவாமி கோயிலில் சித்திரை திருவிழாவையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.

Updated On :30 ஏப்ரல் 2026, 7:58 pm

உத்திரகோஷமங்கை மங்களநாத சுவாமி கோயிலில் சித்திரை திருவிழாவையொட்டி வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், திருஉத்திரகோஷமங்கை கிராமத்தில் மங்களநாதசுவாமி- மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த ஏப். 21- ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் புதன்கிழமை நடைபெற்றது.

இதன் தொடா்ச்சியாக வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்டிருந்த தேரில் சுவாமி எழுந்தருளியதும் மாலை 5.30 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. நான்கு ரத வீதிகள் வழியாக தேரோட்டம் நடைபெற்ற போது பக்தா்கள் சுவாமி, அம்பாளுக்கு தேங்காய் உடைத்து வழிபட்டனா். இதன் பிறகு தோ் நிலையை அடைந்தது. தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா். மாவட்ட காவல்துறை சாா்பில் 50- க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். திருவிழா ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் செய்திருந்தது.

தேரில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த மங்களநாதசுவாமி- மங்களேஸ்வரிஅம்மன்.

தேரில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த மங்களநாதசுவாமி- மங்களேஸ்வரிஅம்மன்.