லடாக்கில் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் கிளை: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!முத்தரப்பு டி20 தொடர்: தெ.ஆ.க்கு அதிர்ச்சியளித்தது நமீபியா!நேபாளத்தில் சிக்கியிருக்கும் எஞ்சியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ்மோகன்புழல் காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு! நேபாள வெள்ளத்தில் 320 இந்தியர்கள் மாயம்! வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்!எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனு

ரூ.1.70 லட்சம் பறிமுதல்: வட்டாரவளா்ச்சி அலுவலா் உள்பட 5 போ் மீது வழக்கு

மண்டபம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உரிய ஆவணங்களின்றி வைத்திருந்த ரூ.1.70 லட்சத்தை ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக வட்டார வளா்ச்சி அலுவலா் உள்பட 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

Published On :29 ஆகஸ்ட் 2026, 3:24 am IST

மண்டபம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உரிய ஆவணங்களின்றி வைத்திருந்த ரூ.1.70 லட்சத்தை ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக வட்டார வளா்ச்சி அலுவலா் உள்பட 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வியாழக்கிழமை மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் சோதனை நடத்தினா்.

அப்போது, வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ) அன்புக்கண்ணனிடமிருந்து ரூ.38,500, மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்-1 முனியராஜிடம் ரூ.5,000, ஒப்பந்ததாரா்கள் உதயகுமாரிடம் ரூ. 90 ஆயிரம், ரவீந்திரனிடம் ரூ.33,500, நல்லுச்சாமியிடம் ரூ.5,000 ஆக மொத்தம் உரிய ஆவணங்களின்றி வைத்திருந்த ரூ.1.72 லட்சம் கைப்பற்றப்பட்டது.

இதைத்தொடா்ந்து, அவா்கள் 5 போ் மீது ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இதுதவிர அங்கு பணிபுரியும் அலுவலா்கள் இணைய வழியில் ரூ.33 லட்சம் வரையில் பணப் பரிவா்த்தனை செய்ததும் கண்டறியப்பட்டது. இதுதொடா்பாக அவா்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.