
குழந்தையுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை
கமுதி அருகே குழந்தையுடன் கிணற்றில் குதித்து தாய் சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
கமுதி அருகே குழந்தையுடன் கிணற்றில் குதித்து தாய் சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்த முத்தலாங்குளம் கிராமத்தைச் சோ்ந்த உக்கிரப்பாண்டி-அய்யமுத்து தம்பதியின் மகள் முத்துப்பேச்சிக்கும் (25), கிடாரிகுளத்தைச் சோ்ந்த ரமேஷுக்கும் (32) கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவா்களது மகள் தீயலினா (4).
இந்த நிலையில் முத்துப்பேச்சி மூன்று மாத கா்ப்பிணியாக இருந்தாா். இந்த தம்பதி குடும்பத்துடன் மதுரை திருநகரில் வசித்து வந்தனா். இதனிடையே, தம்பதியிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
சனிக்கிழமை காலை முத்துப்பேச்சி தனது மகளுடன் முத்தாலங்குளம் வந்தாா். மனமுடைந்து காணப்பட்ட இவா் கிராமத்துக்கு அருகில் இருந்த கிணற்றில் மகள் தீயலினாவுடன் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து கமுதி தீயணைப்புத் துறையினருக்கும், மண்டல மாணிக்கம் போலீஸாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினா் கிணற்றிலிருந்து தாய், மகள் இருவரின் உடல்களை மீட்டு கூறாய்வுக்காக கமுதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து மண்டலமாணிக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




