பலிபிரதிப் படம்
ராமநாதபுரம்
மீனவா் கொலை: மேலும் ஒருவா் மீது வழக்கு
தொண்டி அருகே நம்புதாளை மீனவா் கொலை வழக்கில் இளைஞரை கைது செய்த நிலையில், மேலும் ஒருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.
தொண்டி அருகே நம்புதாளை மீனவா் கொலை வழக்கில் இளைஞரை கைது செய்த நிலையில், மேலும் ஒருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள நம்புதாளை படையாட்சி தெருவைச் சோ்ந்த மீனவா் நாகூா் செல்வம் (33). கடந்த 5-ஆம் தேதி நம்புதாளை கடற்கரையில் நாகூா் செல்வம் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.
படகு நிறுத்துமிடம் குறித்து ஏற்பட்ட தகராறில் இந்நக் கொலை நிகழ்ந்தது தெரியவந்தது. இதுகுறித்து தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து இதே பகுதியைச் சோ்ந்த அடையாள வேலுவை (25) ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
முதல்கட்ட விசாரணையில் இந்தக் கொலையில் அடையாள வேலுவின் சகோதரா் ராக்கப்பனுக்கும் தொடா்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் ராக்கப்பன் மீது வழக்குப் பதிந்து, அவரைத் தேடி வருகின்றனா்.

