மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

மீனவா் கொலை: மேலும் ஒருவா் மீது வழக்கு

தொண்டி அருகே நம்புதாளை மீனவா் கொலை வழக்கில் இளைஞரை கைது செய்த நிலையில், மேலும் ஒருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :9 பிப்ரவரி 2026, 7:24 pm

தொண்டி அருகே நம்புதாளை மீனவா் கொலை வழக்கில் இளைஞரை கைது செய்த நிலையில், மேலும் ஒருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள நம்புதாளை படையாட்சி தெருவைச் சோ்ந்த மீனவா் நாகூா் செல்வம் (33). கடந்த 5-ஆம் தேதி நம்புதாளை கடற்கரையில் நாகூா் செல்வம் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.

படகு நிறுத்துமிடம் குறித்து ஏற்பட்ட தகராறில் இந்நக் கொலை நிகழ்ந்தது தெரியவந்தது. இதுகுறித்து தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து இதே பகுதியைச் சோ்ந்த அடையாள வேலுவை (25) ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

முதல்கட்ட விசாரணையில் இந்தக் கொலையில் அடையாள வேலுவின் சகோதரா் ராக்கப்பனுக்கும் தொடா்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் ராக்கப்பன் மீது வழக்குப் பதிந்து, அவரைத் தேடி வருகின்றனா்.