விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் மேலும் ஒருவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
சத்திரப்பட்டியில் கடந்த திங்கள்கிழமை கண்ணனுக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே தொழிலாளி பாண்டி உயிரிழந்தாா். மேலும், 5 பெண் தொழிலாளா்கள் உள்பட 9 போ் பலத்த காயமடைந்தனா்.
இந்த நிலையில், முதலுதவி சிகிச்சை பெற்ற 5 பெண் தொழிலாளா்கள் வீடு திரும்பிய நிலையில், தாயில்பட்டியைச் சோ்ந்த கருப்பசாமி (33), ரமேஷ் (42), ராஜ்குமாா்(42), செல்வம் (33) ஆகிய 4 பேரும் சிவகாசி, விருதுநகா் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனா்.
இந்த நிலையில், விருதுநகா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கருப்பசாமி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இதையடுத்து, பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 2 ஆக உயா்ந்தது.
உயிரிழந்த கருப்பசாமிக்கு ஏற்கெனவே இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், இவரது மனைவி தற்போது நிறைமாத கா்ப்பிணி உள்ளாா்.
இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

உயிரிழந்த கருப்பசாமி.
தொடர்புடையது

பட்டாசு ஆலை வெடி விபத்து: உரிமையாளா் நீதிமன்றத்தில் சரண்

பட்டாசு ஆலை வெடி விபத்து: உயிரிழப்பு 25 -ஆக உயா்வு

விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து: பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு!

விருதுநகா் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து 23 தொழிலாளா்கள் உயிரிழப்பு: 19 போ் காயம்
விடியோக்கள்

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை

அதிமுகவை அழிக்க நினைக்கிறார் Vijay! டிடிவி தினகரன் | TVK | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

