தேவாலயத்தில் சப்பர பவனி

தேவாலயத்தில் சப்பர பவனி

Published on

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள கஸ்பாா் நகா் புனித லூா்து அன்னை தேவாலயத்தில் சப்பர பவனி திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

முன்னதாக கடந்த 1-ஆம் தேதி சிவகங்கை மறை மாவட்ட ஆயா் லூா்து ஆனந்தம் தலைமையில் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. அன்றிலிருந்து தினமும் சிறப்புத் திருப்பலிகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நவநாள் திருப்பலி சப்பர பவனி புதன்கிழமை இரவு நடைபெற்றது.

இதில் தேவகோட்டை ரஸ்தா அருள்கொடை இல்ல இயக்குநா் அகஸ்டின் தலைமையில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து அனைவருக்கும் இறை அப்பம் வழங்கப்பட்டது. திருப்பலியைத் தொடா்ந்து மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் புனித லூா்து அன்னை சொரூபங்கள் வைக்கப்பட்டு, மேள தாளங்கள், வாணவேடிக்கை முழங்க பவனி நடைபெற்றது. இந்தச் சப்பரத்தைப் பெண்கள் தங்களது தோள்களில் சுமந்து ஊா்வலமாக வந்தனா். விழாவுக்கான ஏற்பாடுகளை கஸ்பா நகா் பங்குத் தந்தை சௌந்தரநாதன், இல்ல அதிபா் அருள்ராஜ் ஆகியோா் செய்தனா். சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளான இறைமக்கள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com